Kavitai | Kathaikal | Vimarsanam | CookingTips | Proverbs | Movie Links | TamilCalender
Joke

Your Ad Here
Star

வெற்றி

நிலா
தேய்வதால்
வானம் வருத்தப்படுவதில்லை...

பூக்கள்
உதிர்வதால் செடிகள்
புலம்புவதுமில்லை...

மழையில் நனைவதால்
மரங்கள் குடை
பிடிப்பதுவுமில்லை...

மதங்கள்
வேறுபடுவதால் மனிதம்
மாறுவதுமில்லை...

நம்பிக்கை தொடர்வதால்
தோல்வி வெற்றியின்
வேரறுப்பதுமில்லை..

உழைத்து வாழ்வதால்
வாழ்வில் வறுமை
வீசுவதுவுமில்லை..!

பார்வை

எத்தனை முறைதான்
இப்படி ஏமாறுவது?

நீ இல்லாத போதுகூட
எனக்கேன்
உன் வீட்டு ஜன்னல்
நீயாகவே தெரிகிறது?

கண்ணே...

காற்றால் கலைந்து விடாத
மேகமாகி
உனக்காக காத்திருப்பேன்!

நீரால் கரைந்து விடாத
மலையாகி,
உனக்காக காத்திருப்பேன்!

காலத்தால் அழிந்துவிடாத
காவியமாகி,
உனக்காக காத்திருப்பேன்!

மரணத்தால் மறைந்துவிடாத
மா மனிதனாகி,
அடுத்த ஜென்மத்திலும்...
உனக்காகவே காத்திருப்பேன்!

நீ வருவாய் என...

மொட்டாய் காத்திருக்கிறேன் உன்
மூச்சுக்காற்று பட்டு மலர...

விடியாமல் காத்திருக்கிறேன் உன்
முகம் பார்த்து விடிய...

பாதையாய் காத்திருக்கிறேன் உன்
பாதம் பட்டு துலங்க...

மணமாய் காத்திருக்கிறேன்
என்னை நீ நுகர...!

வேண்டுகிறேன்

குடை பிடித்தபடி
உன்னோடு சேர்ந்து பயணிக்க
மழை வர வேண்டுகிறேன்!

மரத்தடி நிழலில் ஒதுங்கி
உன்னோடு பேசிக் கொண்டிருக்க
வெயிலடிக்க வேண்டுகிறேன்!

கூந்தல் வாசம் நுகர்ந்தபடி
உன்னோடு பொழுதை கழிக்க
தென்றல் வீச வேண்டுகிறேன்!

கடலில் கால் நனைத்தபடி
உன்னோடு விளையாடிக் கொண்டிருக்க
அலையடிக்க வேண்டுகிறேன்!

கவிதை சொல்லியபடி
உன்னோடு காலார நடக்க
பாதை நீள வேண்டுகிறேன்!

காதலித்தபடி
உன்னோடு ஆயுள் முழுதும் வாழ
நீ என் மனைவியாக
வேண்டுகிறேன்...

கருவறையில்...

உன்னை
என் கருவறையில்
உயிர் தரிக்கிறேன்
என் காதலனாக!

என் கணவனாக
நீ உயிர் பெறுவாய் என்று...!

உன் பிரிவும், செல்லக் கோபமும்,
குழந்தை பிறக்கும் தறுவாயில்
தாய் அனுபவிக்கும் வலியான
சுகங்கள் போல...

எனக்கும் அது
சுகமாகத்தான் இருக்கிறதடா!

நீ கருவிலே சிதைந்து விடாதே...
நான் கதறி அழுதுவிடுவேன்!

உறுத்தல்

முள்ளாய் இருந்தேன்
மலராய் ஆக்கினாய்!

தீயாய் இருந்தேன்
தீபமாய் ஆக்கினாய்

கல்லாய் இருந்தேன்
சிலையாய் ஆக்கினாய்.

விலங்காய் இருந்தேன்
மனிதனாய்
ஆக்கினாய்.

ஆனால்...
நீ மட்டும் மாறாமல்
இன்னும் கல்லாய்
இருப்பது ஏன்?

முரண்பாடு

புத்தரை
வணங்கியபடி
பக்தன்
கேட்டான்,

புத்தர்
துறந்த
அனைத்தையும்...!

காதல் பிரிவு

மலையை விட்டு
பிரியும் அருவி!

கடலை விட்டு
பிரியும் கரை!

வானத்தை விட்டு
பிரியும் மழை!

உடலை விட்டு
பிரியும் உயிர்!

உன்னை விட்டு
பிரியும் நான்!

என்னை விட்டு
பிரியும் நீ!

நம் இருவரையும்
விட்டு பிரிகிறது
நம் உண்மையான காதல்!

more kavitai...
Star Photo
Joke

Tell a Friend:

Copyright © 2006 CineChips.com All Rights Reserved.
Site Meter